Tuesday 7 October 2014

புலிப்பாணி ஜோதிடம் - சுக்கிர மகாதிசை பலன்கள்

சுக்கிர மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசை வருடம் மொத்தம் 20 ஆகும்இதில் சுக்கிர பகவானின்சுயபுத்தியான ஆதிக்க காலம் 3 வருடம் 4 மாதங்களாகும்இக்காலகட்டத்தில் இச்சாதகன் பூமியில் ஓர் அரசனைப்போல வெகு சிறப்புடன்வாழ்வான்பலவிதமான சுக போகங்களும் உண்டாகும்பெருமை தரத்தக்கஇலக்குமி தேவியானவள் இவனது மனையை விரும்பி ஒரு பொற்கொடிபோல வந்து அமைவாள்சுப சோபனங்களும் சுபயோகங்களும் உண்டாகும்.மனம் விரும்பிய மங்கையர் வாய்த்து பலவகையிலும் இன்பம் துய்த்துவாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்
இச்சுக்கிர மகாதிசையில் சூரிய பகவானின் ஆதிக்க காலம் 1 வருடமாகும்.இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன்கேட்பாயாக!ஜுரத்தினால் பீடையுண்டாகும்நாய் கடித்தல் போன்ற பிணியும் உண்டாம்.பகைவர்கள் குடிகெட்டுப்போகும் வண்ணம் கேடு நினைத்து அதனைநிறைவேற்றவும் செய்வர்நல்ல குணம் பொருந்திய தாய்தந்தையின்மரணம் முதலியன சம்பவிக்கும்குறைவற வாழ்ந்த போதிலும் அறிவில்தெளிவின்றி வெகு கலக்கம் ஏற்படும்தன் துணைவியை விட்டுப்பிரிந்துஆண்டியாகி மலைப்பிரதேசங்களுக்குச் செல்வான் என்று போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 8மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனதிருமகளைப்போல் திகழ்ந்த அன்னை மரணமடைவாள்அவளது சாவுக்குப்பின் தேடிவைத்திருந்த திரவியங்கள் நாசமாகிப் போகும்பதர் போன்ற மனைவியைவிரும்பாது அவளிடமிருந்து விலகி இச்சாதகன் ஓடிப் போதலும் நேரும்.வியாதி தொடர்ந்து காண்பதால் வெகு வருத்தையும் அடைவான்சமயம்பார்த்து பழவினையானது தனது பணியைச் செய்வது எத்தனைஅதிசயமானது எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 1 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனஎலி கடித்தலால்ஏற்படும் நெடுநாள் இருமல் முதலியனவும் வந்து பற்றிக் கொள்ளும்.வயிற்றில் உபாதை ஏற்படும்குதத்தில் கடுப்பு உண்டாகும்பெண்களால்தொல்லைகள் ஏற்படும்கொடுமையான பகைவனும் வந்து பற்றிக்கொள்வான் என்று போகரின் பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் இராகு பகவானின் ஆதிக்க காலம் 3 வருடங்களாகும்.இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனசிரரோகம்காமாலை,சயரோகம் முதலிய நோய்கள் ஏற்படுதலோடு அரசரது பகையும்அபமிருந்துதோஷமும் மனத்திற்கினிய தாய் தந்தை மடிந்து படுதலும் ஏற்படும்மேலும்மேக நோய் எனும் ரோகம் ஏற்பட்டு தேகமெங்கும் சிரங்குகுட்டம் போன்றநோயுற்று அவதிப்படுவான் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்
சுக்கிர மகாதிசையில் வியாழ பகவானின்ஆதிக்க காலம் 2 வருடம் 8மாதங்களாகும்இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவனமனம்விரும்பிய மங்கையரைச் சேர்தலும் அதனால் மங்களகரமான வாழ்வும்சுபயோகங்களும் நேரும்விரும்பிய வண்ணம் பெரும் பொருட் சேர்க்கைஏற்படும்அச்செல்வம் மேலும் மேலும் பெருகிக் காணும்நன்மை தரத்தக்கஆண் சந்தானமும் பெண் மக்களும் வாய்ப்பர்நாடு நகரங்கள் வசமாகும்.பலவிதத்திலும் நன்மையும் வாகன யோகமும் ஏற்பட்டு சிறந்தநண்பர்களையும் பெற்றுச் சுகித்து வாழ்வான் எனப் போகர் கருணையால்புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைசனி புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் சனிபகவானின் ஆதிக்க காலம் 3 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவனவெகுதன லாபம் வாய்க்கும் பூமிமனை முதலியன நேரும்அரச சம்பத்துடன்வாழ்வது நேரும்குலமாதர்நன்மைந்தர் அமைதலோடு நாடு நகரங்களும்உண்டாகும்மிகப்பெரிய தனவந்தனாகி ஆளுமை மிகுந்து ஒருபெருமன்னன் என்று கூறக்கூடிய வகையில் அவனியில் பொலிவுறவாழ்வான் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் புதபகவானின் ஆதிக்க காலம் 2 வருடம் 10மாதஙகளும்இக்கால கட்டத்தில் விளையும் பலன்களைக் கூறுவோம்தெளிவாகக் கேட்பாயாகநாடு நகரம் வசமாகும்தன்னிகரில்லாதஅரசனெனஆட்சி புரியும் நிலை ஏற்படும்முடிவில் இந்நிலவுலகில் தவத்திற்சிறந்த தவசியாதலும் நேரும்கைவிட்டுப்போம் என்று சொல்லத்தகும்பொன் முதலாகிய பொருள்களையும் பூமி லாபத்தையும் பெற்று அரசசெல்வமெய்தி ஆண்டிருக்கும் நிலை ஏற்படும் எனப் போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


சுக்கிர மகாதிசைகேது புத்திப் பலன்கள்

சுக்கிர மகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2மாதங்களாகும்இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன:வளருகின்ற கொடிபோலும் இடையுடைய மனையாள் மரணம் நேரும்.மிகுதியான திரவிய நாசம் ஏற்படும்ஒப்பாகும் மிக்காரும் இல்லாதுதனித்தரசாண்டிருந்த நிலைமை மாறும்நாடு நகரங்கள் இழப்பாகும்,சம்பத்து குறையும்தாய் தந்தை மரணமடைவர்கோள் வைக்கக் கூடியசத்துருக்களால் குடிக்குக் கேடு விளையும்மனைவி மனம் வெறுத்துவீட்டைவிட்டுப் போவாள்குடும்பமானது சிதையும் எனப் போகர் அருளால்புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment