Tuesday 7 October 2014

புலிப்பாணி ஜோதிடம் - செவ்வாய் மகாதிசை பலன்கள்

செவ்வாய் மகாதிசைசெவ்வாய் புத்திப் பலன்கள்

இனிசேய் என்று அழைக்கப்படும் செவ்வாயின் தசையில்அக்கிரகத்திற்குரிய சுயபுத்தி 147 நாள்கள் ஆகும்இவனது பொசிப்புக்காலத்தில் ஏற்படும் பலன்களாவனபுகழ்மிக்க அரசர் பகை உளவாகும்;ஆயுதத்தாலும் பீடைகள் நேரும்நாகப்பாம்பினைப் போன்ற விடமுடையசத்துருக்களால் வியாதியும் நேரும்தன விரயம் ஏற்படும்உடல் சேதமும்உண்டாகும்சூனியம்பில்லிபோன்றவற்றால் துன்பங்கள் நேரும்நாடேதூற்றிப் பகையாகும் என்று போகரது அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப்பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


செவ்வாய் மகாதிசைஇராகு புத்திப் பலன்கள்

பகை செய்யும் கிரகமான செவ்வாய் கிரகத்தின் திசையில் கரும்பாம்பு என்றஇராகு பகவானின் பொசிப்புக் காலம் 1ட் வருடம் 18 நாள்களாகும்;இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்கள் வெகு துன்பங்களை விளைவிக்கும் .சுரதோடம்வாதம் முதலிய நோய்களால் பீடை சத்துருக்களினால் ஏற்படும்துன்பம் மற்றும் அக்கினியாகிய நெருப்பினால் துன்பம் நேரும்;மனைவியால் விரோதம் வந்து வகை தொகையான துன்பங்களைக் காட்டும்,அணியும் ஆபரணங்களும் அழிந்தொழியும்நலமில்லா வகையில்மனையாளும் சென்று நன்மையில்லாத நிலையினைவிட்டு நடப்பாள்என்றும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


செவ்வாய் மகாதிசைவியாழன் புத்திப் பலன்கள்

இனியொன்று இச்செவ்வாய் தசையில் வியாழபகவானின் பொசிப்பானது11மாதம் 6 நாள் ஆகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கவனமாகக்கூறுகிறேன்நன்கு கேட்பாயாகபூணணிந்த மாதான மனைவியும்மனையில் பொருந்தி அன்புடன் இருப்பாள்புகழானது பெருகும்மிகப் பலசிறப்புகள் ஏற்படும்சத்துருக்கள் நேசமாவர்எடுத்த காரியங்கள் அனைத்தும்வெற்றிப்பாதையில் வெகுவாக முன்னேறி நற்பெயரும் புகழும்தோற்றுவிக்கும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப்பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.


செவ்வாய் மகாதிசைசனி புத்திப் பலன்கள்

வெற்றியே அளிக்கவல்ல செவ்வாய் திசையில் அச்செவ்வாயின் பகைவன்எனச் சொல்லத்தகும் சனிபகவானின் பொசிப்புக் காலம் 1வருடம் 1 மாதம் 9நாள்களாகும்இவை சுகமில்லா நாள்களேஇக்கால கட்டத்தில் பலன்களைக்கூறுகிறேன்கேட்பாயாகஅறிவற்ற பேதைகளான சத்துருக்களினால் பயம்ஏற்படும்நோயின் பயம் உண்டாகும்பெண்டிரும்புத்திரர்களும்மரணமடைய நேரிடும்ஆதாரமற்ற தர்க்கங்கள் உண்டாகும்அவையும்வெகுவானதாக இருக்கும்சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால்பயமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


செவ்வாய் மகாதிசைபுதன் புத்திப் பலன்கள்

இனிசெவ்வாய் திசையில் புகபகவானின் புத்தி 1 வருடம் 1மாதம் 27நாள்களாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவனபாண்டு முதலியநோய்களும்நீரிழிவும் தேக பலனை அழித்துக் கேடு செய்யும்வீட்டில்மனையாளும் வியாதிக்கு அடிமைப்பட்டு கேடடைவாள்எடுத்த காரியங்கள்எல்லாம் முற்றும் கேடுற்றுப் பொல்லாததாகவே முடியும் என்று போகர்அருளால் புலிப்பாணி பாடினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



செவ்வாய் மகாதிசைகேது புத்திப் பலன்கள்

மேலும்இச்செவ்வாய் திசையில் கேது பகவானின் பொசிப்புக்காலம் 127நாள்களாகும்இவை ஆகாதவையேஇக்கால கட்டத்தில் நிகழும்பலன்களாவனமனையில் நாகணவாய்ப்புள் போன்ற பூவையர்க்கும்,புத்திரர்க்கும் வியாதி உண்டாகிப் பெருத்த துன்பம் நல்கும்அதனால்மரணமும் நேரும்இதுவரை இன்பமுள்ள அனைத்தும் துன்பம் தரும்.விரோதம் பெருகும்சத்துருக்களாலும் பிசாசு பயத்தாலும் துன்பங்கள் மிகும்என்று போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


செவ்வாய் மகாதிசைசுக்கிர புத்திப் பலன்கள்

தன்னிரகற்ற செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி தன்றன் பொசிப்புக் காலம் 14மாதமாகும்இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன்நன்குகேட்பாயாகமாறுபாடற்ற சத்துருக்களால் விலங்கு பூண நேரும்மீன்போலும் கண்ணுடைய போகஸ்திரீயின் சேர்க்கை நிகழும்இன்பமில்லாதநிலையில் வெகு துன்பங்களே நிகழும்பலவகையிலும் காரியங்கள்கேடுறும்அரசபயம் உண்டாகும்ஆயுதத்தால் கேடுறும் பயம் ஏற்படும்என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.


செவ்வாய் மகாதிசைசூரிய புத்திப் பலன்கள்

கீர்த்திமிகு செவ்வாய் திசையில் சூரிய புத்தி 126 நாள்களாகும்அவனதுபொசிப்புக் காலத்தில் ஏற்படும் பலன்களாவனவெகு சம்பத்து ஏற்படும்,ஐஸ்வரியம் பெருகும்சத்துருக்கள் உறவாகி அதனால் இன்பம் காணும்.எல்லாவகைத் துன்பங்களும் விலகும்மிகுந்த தன லாபம் நேரும்., பலசிவத்தலங்களுக்குச் சென்று பிரசித்திமிகு பூசைகளை இச்சாதகன் புரிவான்.சிவதீட்சை பெறுவான் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சூரிய புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.



செவ்வாய் மகாதிசைசந்திர புத்திப் பலன்கள்

இனிஇச்செவ்வாய் மகாதிசையில் இறுதி புத்தியான சந்திரனின் பொசிப்புக்காலம் ஏழு மாதங்களேயாகும்இவ்வேழு மாதங்களும் நற்பலன்களும்விளையும்மனைவி இணக்கமாக இருந்து வெகு செல்வம் நல்கி விளங்கிவாழ்வாள்தீயவர்களும் தங்கள் தவற்றினையுணர்ந்து வணங்கி வழிபடுவர்.இந்நிலவுலகில் வெகுவான பேர் விளங்கும்நல்ல மனைவியரும் புத்திரரும்வாய்ப்பர்இவையெல்லாம் குலதெய்வத்தின் பேரருளால் என்று போகர்அருளால் புலிப்பாணி கூறினேன்.இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப்புலிப்பாணி விவரிக்கிறார்.

No comments:

Post a Comment