Thursday 13 November 2014

நோய் தீர்க்கும் அதிசய தீர்த்தம்!

முருகனின் திருக்கோயில்களில் ஒன்று சுருளிமலை. இது கம்பம் அருகில் உள்ளது. இம்மலைக்கு சுருளிப்பட்டியிலிருந்து செல்ல வேண்டும். சுருளிமலையிலிருந்து ஏராளமான மூலிகைகளுடன் கலந்து அருவியாக விழும் இந்த சுருளி தீர்த்தத்தில் நீராடினால் பல நோய்கள் குணமாகின்றனவாம். கோவைக்கு வட கிழக்கே 42 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு மேற்கே உள்ள குளத்தில் நீராடி பயபக்தியுடன் துளசி, வேப்பங்கொழுந்து, மாங்கொழுந்து, அரளிப்பூ, எலுமிச்சம்பழச்சாறு முதலான பொருட்களைச் சேர்த்து தீமூட்டுகிறார்கள். அதிலிருந்து வரும் புகையை பிடிக்கிறார்கள். அதில் கிடைக்கும் கரித்தூளை சொரி சிரங்குகளின் மீது பூசுகிறார்கள். இதனால் தோல் நோய்கள் குணமாகின்றன. 

No comments:

Post a Comment