Wednesday 1 September 2021

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்கள்.32.

 கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்கள்.32.

1 .கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.
2. கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம்.
3. ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
4. கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
5. கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
6. எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும். எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
7. ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால், வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.
8. கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று பொருள்.
9. கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறு ம்.
10. கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.
11. விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
12. விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
13. ஏசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
14. ஏசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் வரும். ஆனால் அது விரைவில் மாறிவிடும்.
15. காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
16. கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.
17. கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.
18. கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.
19. கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.
20. ஐய்யனார் தெய்வத்தை கனவில் கண்டால் சகல சௌகரியமும் கிட்டும்.
21. நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.
22. விநாயகரை கனவில் கண்டால் உங்களின் எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என்று பொருள்.
23. யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
24. யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் அணைத்து காரியமும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.
25. முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான தோஷமும் நீங்கிவிட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே நடக்கும்.
26. அம்பாள்/அம்மனை கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.
27. அம்பாள்/அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு வந்தால் எந்த தீமையும் நம்மை அண்டாது என்று அர்த்தம்.
28. திருநீறு பூசுவது போல கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கும்.
29. கோவிலை கனவில் கண்டால் நன்மையான பலன்கள் ஏற்படபோகிறது என்று அர்த்தம்.
30. பாழடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
31. கோவிலில் இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் தோன்றும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் நன்மையாகவே முடியும்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(1) - ஹம்ஸாநந்தி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(1) - ஹம்ஸாநந்தி

அடிக்கடி நான் கேட்கும் அபூர்வ ராகங்களில் ஒன்று இந்த ராகம். குழந்தையை வருடும் போது ஏற்படும் மிருதுவான ஸ்பரிசத்தை இந்த ராகத்தை பாடும் போதும், கேட்கும் போதும் உணரலாம்.
ஆன்மிக வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமானது அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்கள் இந்த ராகத்தை கேட்கும் போது தானாக நம் இதயத்தில் உதிக்கும்....



உயிர் வளர்க்கும் ராகங்கள்(2) - அமிர்தவர்ஷினி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(2) - அமிர்தவர்ஷினி

இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையில் சிறிய காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டு, மேகங்கள் குவிந்து மழையை ஏற்படுத்த கூடிய அற்புத ராகம்.
நம்முடைய காலத்திலேயே சங்கீத வித்வான் முத்துஸ்வாமி தீக்ஷிதர் இந்த ராகத்தை பாடி மழை பொழிய வைத்துள்ளார். மறைந்த மாபெரும் நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் இந்த ராகத்தை இசைத்து மழை பொழிய வைத்துள்ளார்.
மாரியம்மனுக்கு உகர்ந்த ராகமாக இந்த ராகம் கொள்ளப்படுகிறது. நான் கேட்கும் அபூர்வ ராகங்களில் ஒன்று இந்த ராகம்.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(3) - ரேவதி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(3) - ரேவதி

இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ ஆழ்ந்து கேட்டாலோ நம் சுற்றுப்புற சூழ்நிலைகளில் நடைபெறும் சூழ்நிலையில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஆழமாக புரியும்.
கேட்கும் போதே தெய்வீக உணர்வை (divine vibration) தூண்டும் அற்புத ராகம்...
ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுபவர்களின் ஆழ்மனதை திறக்கும் அற்புத ராகம்.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(4) - தீபகம்

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(4) - தீபகம்

இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ ஆழ்ந்து கேட்டாலோ நம் சுற்றுப்புற சூழ்நிலைகளில் குளிர்ச்சியை நீக்கி வெப்பத்தை ஏற்படுத்த கூடிய அற்புத ராகம்.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(5) - சுநாத வினோதினி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(5) - சுநாத வினோதினி

ஒரு அன்னையின் அரவணைப்பில் கிடைக்கும் மன சாந்தியை இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ ஆழ்ந்து கேட்டாலோ நாம் அனுபவமாக உணரலாம்.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(6) - ஆரபி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(6) - ஆரபி

இந்த ராகத்தை முறையாக பாடினாலோ, இசைத்தாலோ ஆழ்ந்து கேட்க கேட்க நம் மனத்திலுள்ள தீய குணங்கள், எண்ணங்கள் அழிந்து நல்லெண்ணங்கள் தானாக உருவாக ஆரம்பிக்கும்.
அடிக்கடி இந்த ராகத்தை அனைவரும் ஆழ்ந்து ஆழ்ந்து கேளுங்கள்



உயிர் வளர்க்கும் ராகங்கள்(7) - பதரிகா

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(7) - பதரிகா

இந்த ராகத்தை முறையாக பாடும்போதும், கேட்கும் போதும் மூச்சுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் அடைப்புகள் நீங்கி, மூச்சு மூலாதாரத்தை சென்றடைவதை உணரலாம்...
அடிக்கடி இந்த ராகத்தை அனைவரும் ஆழ்ந்து ஆழ்ந்து கேளுங்கள்



உயிர் வளர்க்கும் ராகங்கள்(8 😎 நயனரஞ்சனி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(8

😎நயனரஞ்சனி
இந்த ராகத்தை முறையாக பாடும்போதும், கேட்கும் போதும் கண்ணுக்கு குழுமையையும், மனதுக்கு இனிய காட்சிகளும் தோன்றும்.
அடிக்கடி இந்த ராகத்தை அனைவரும் ஆழ்ந்து ஆழ்ந்து கேளுங்கள்.....



உயிர் வளர்க்கும் ராகங்கள்(9) - நீலாம்பரி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(9) - நீலாம்பரி

இந்த ராகத்தை முறையாக பாடும்போதோ, கேட்கும் போதோ உடல் சூட்டை தணித்து ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தும்.
அடிக்கடி இந்த ராகத்தை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லும் முன் கேளுங்கள்.....



உயிர் வளர்க்கும் ராகங்கள்(10) - செஞ்சுருட்டி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(10) - செஞ்சுருட்டி

இந்த ராகத்தை முறையாக இசைத்தால், ஆவினங்களை மயக்கி கட்டுப்படுத்தி ஓரிடத்தில் நிற்க செய்ய கூடியது.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(12) - வனஸ்பதி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(12) - வனஸ்பதி

இந்த ராகத்தை கேட்கும் போதோ அல்லது பாடும் போதோ நல்லெண்ணம் பூக்காத மனதில் கூட நற்சிந்தனை தோன்றும். அப்பேற்பட்ட அபூர்வ சக்தி கொண்ட ராகம் இது.....



உயிர் வளர்க்கும் ராகங்கள்(13) - ரஞ்சனி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(13) - ரஞ்சனி

இந்த ராகத்தை கேட்டால் வயோதிபர்களுக்கு கூட இளமையும், பலமும் திரும்ப ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட அபூர்வ ராகம் இது.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(14) - மலையமாருதம்

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(14) - மலையமாருதம்

இந்த ராகத்தை கேட்டாலோ, இசைத்தாலோ எப்பேற்பட்ட கொடிய நோயுற்றவர்களை கூட அவர்களின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை தூண்டி, அவர்கள் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணமடைய செய்யும் அபூர்வ ராகம் இது.



உயிர் வளர்க்கும் ராகங்கள்(15) - ஸ்ரீரஞ்சனி


 உயிர் வளர்க்கும் ராகங்கள்(15) - ஸ்ரீரஞ்சனி

இந்த ராகத்தை கேட்கவோ, பாடவோ செய்தால் வீட்டிலுள்ள எப்பேற்பட்ட கொடிய வறுமையும் நீங்கி செல்வம் கொழிக்க செய்யும் அபூர்வ ராகம் இது. இந்த ராகத்தில் தான் ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண் வீட்டில் பொன்மழை பொழிய செய்தார்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(16) - கல்யாண தாஹிணி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(16) - கல்யாண தாஹிணி

இந்த ராகத்தை இசைக்க கேட்டால் மனதில் பெருந்தன்மையை ஏற்படுத்தி, சிறு குற்றம் குறைகளை மன்னிக்கும் இயல்பை ஏற்படுத்தும். நற் காரிய காலங்களில் இசைக்க உகர்ந்த ராகம் இது.


உயிர் வளர்க்கும் ராகங்கள்(17) - மித்ராஞ்சனி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(17) - மித்ராஞ்சனி

இந்த ராகத்தை இசைக்க கேட்டால் சுயநலம் கருதாத நட்பிற்கு வித்திடும். தனது நண்பனுக்கு உதவும் மனப்பான்மையை ஏற்படுத்தும்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(18) - சஹானா

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(18) - சஹானா

இந்த ராகத்தை ஒருவர் பாடவோ அல்லது கேட்கவோ செய்தால், முன்கோபம் தணியும். தனக்கு கீழ்படிந்தவர் மேல் கருணை உண்டாகும்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(19) - பாவன ஹரி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(19) - பாவன ஹரி

இந்த ராகத்தை பாடவோ, கேட்கவோ செய்தால் கடந்த கால நினைவுகள் மனதில் இனிக்கும்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(20) - பாடி ரத்வனி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(20) - பாடி ரத்வனி

இந்த ராகத்தை பாடவோ, கேட்கவோ செய்ய, மனதில் பதுக்கப்பட்டிருக்கும் நியாய, அநியாயங்கள் வெளிக்கொணரப்படும்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(21) - பிரக்ஷாலனாவதி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(21) - பிரக்ஷாலனாவதி

இந்த ராகத்தை பாடவோ, இசைக்கவோ கேட்டால், நாபியிலிருந்து காற்று மேலெழுந்து வர வயிறு மற்றும் உணவு குழாய் சட்டென சுத்தப்படுத்தப்படும்.

உயிர் வளர்க்கும் ராகங்கள்(22) - வித்யாமாலி

 உயிர் வளர்க்கும் ராகங்கள்(22) - வித்யாமாலி

இந்த ராகத்தை இசைக்கவோ கேட்கவோ, செய்தால் இசைக்கப்படும் இடத்தில் செய்யப்படும் காரியங்களில் உள்ள தடைகள் நீங்கும். வித்தைகள் சரிவர வசப்படும். விநாயக பெருமானுக்கு உகர்ந்த ராகம் இது.