Friday 9 August 2019

மந்திர சாஸ்திரத்தின் உதவியுடன் பட்சியை சாதகமாக்கிக்கொள்ளும் முறை

மந்திர சாஸ்திரத்தின் உதவியுடன் பட்சியை  சாதகமாக்கிக்கொள்ளும் முறை
----------------------------------------------------
 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருடைய பட்சி எந்த தொழிலை செய்துகொண்டிருந்தாலும், அது பற்றி கவலைப்படத்தேவையில்லை. பட்சம்,கிழமை,பொழுது அறிந்து அதற்கு தகுந்தவாறு பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை முறைப்படி அட்சர மாறல்(எழுத்து மாற்றம்) செய்து ஜெபித்து வந்தால் எப்பொழுதும் வெற்றியடையலாம் எனக்கூறப்படுகிறது. “நமசிவய” என்பது பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும்.

அமரபட்சம் என்னும் தேய்பிறை
பூர்வபட்சம் என்னும் வளர்பிறை

1. பூர்வபட்சம் (வளர்பிறை) பகலில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள கடைசி எழுத்தான “ய” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “யநமசிவ” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
2. பூர்வபட்சம் (வளர்பிறை) இரவில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள நான்காவது எழுத்தான “வ” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “வயநமசி” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
3. அமரபட்சம் ( தேய்பிறை )பகலில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள இரண்டாவது எழுத்தான “ம” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “மசிவயந” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
4. அமரபட்சம் ( தேய்பிறை)  இரவில் வெற்றி பெற “நமசிவய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் உள்ள மூன்றாவது எழுத்தான “சி” வை முதலெழுத்தாக்கிக்கொண்டு,அதாவது “நமசிவய” என்பதை “சிவயநம” என மாற்றிக்கொண்டு ஜெபித்தால் வெற்றி உண்டாகும்.
5. பஞ்சாட்சரத்திற்கு முன் “ஓம்” எனவும், பஞ்சாட்சரத்திற்கு பின் “சுவாஹா”எனவும் சேர்த்துக்கொண்டு ஜெபிக்கவேண்டும்

No comments:

Post a Comment