Tuesday 27 March 2018

ஏழு கோடி மந்திரங்களில் உள்ள ரகசியங்கள்!

சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். 
தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.

மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னும் அவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று. 

ஏழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. 
ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.

அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும். 

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது. 

சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது. 

சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.

பட் - விக்கினங்களைத் துரத்துவது. 

உம்பட் - காமாதிகளைப் போக்குவது. 

வௌஷட் - தேவதைகளை இழுப்பது. 

வஷட் - தேவதைகளை வசம் செய்வது. 

நமசிவய, சிவயநம, வயநமசி, சிவாய தத்புருட

சிவமந்திரமும் - பலன்களும் 

நங்சிவயநம – திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம – தேக நோய் நீங்கும்

வங்சிவயநம – யோக சித்திகள் பெறலாம்.

அங்சிவயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலிநமசிவய – வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவய – விரும்பியது நிறைவேறும்

ஐயும்நமசிவய – புத்தி வித்தை மேம்படும்.

நமசிவய – பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய – வியாதிகள் விலகும்.

கிலியுநமசிவய – நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய – கடன்கள் தீரும்.

நமசிவயவங் – பூமி கிடைக்கும்.

சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்.

சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம – சிவ தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்.

லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவய – வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்.

ஓம் ஸ்ரீறியும் சிவயநம – அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய – சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்.

திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்.

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

*சாக்தஸ்ரீ  சோமசுந்தரம்*

No comments:

Post a Comment